தொடர்பு எல்லைக்கு வெளியே

வாசலில் விட்ட செருப்பு
நெஞ்சில் சுமந்து
வரிசையில் போராடி
புண்ணிய இடம் சேர்ந்து
கண் எத்தா தூரத்து
கடவுளை கண்ட நொடி
உலகத் துயரெலாம் மறந்து
செருப்பொன்றே ப்ரார்த்தனையாக்கி
காணிக்கைப் பெட்டியில்
கையூட்டாய் காசுமிட்டு
புறம் வந்த போது புரிந்தது
புதிய பயணம் தேடி
புறப்பட்டிருந்தது செருப்பு !

எழுதியவர் : திலகவதி (12-Oct-15, 5:06 pm)
பார்வை : 127

மேலே