thilakavathy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  thilakavathy
இடம்:  nagercoil
பிறந்த தேதி :  17-Mar-1968
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Aug-2013
பார்த்தவர்கள்:  594
புள்ளி:  379

என் படைப்புகள்
thilakavathy செய்திகள்
thilakavathy - thilakavathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 5:06 pm

வாசலில் விட்ட செருப்பு
நெஞ்சில் சுமந்து
வரிசையில் போராடி
புண்ணிய இடம் சேர்ந்து
கண் எத்தா தூரத்து
கடவுளை கண்ட நொடி
உலகத் துயரெலாம் மறந்து
செருப்பொன்றே ப்ரார்த்தனையாக்கி
காணிக்கைப் பெட்டியில்
கையூட்டாய் காசுமிட்டு
புறம் வந்த போது புரிந்தது
புதிய பயணம் தேடி
புறப்பட்டிருந்தது செருப்பு !

மேலும்

தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி 14-Oct-2015 12:35 am
நன்றி தோழி ! 14-Oct-2015 12:34 am
நன்றி ராஜா !நலம் .தாங்களும் தோழமைகளும் நலம் தானே . 14-Oct-2015 12:33 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Oct-2015 6:00 am
thilakavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2015 5:06 pm

வாசலில் விட்ட செருப்பு
நெஞ்சில் சுமந்து
வரிசையில் போராடி
புண்ணிய இடம் சேர்ந்து
கண் எத்தா தூரத்து
கடவுளை கண்ட நொடி
உலகத் துயரெலாம் மறந்து
செருப்பொன்றே ப்ரார்த்தனையாக்கி
காணிக்கைப் பெட்டியில்
கையூட்டாய் காசுமிட்டு
புறம் வந்த போது புரிந்தது
புதிய பயணம் தேடி
புறப்பட்டிருந்தது செருப்பு !

மேலும்

தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி 14-Oct-2015 12:35 am
நன்றி தோழி ! 14-Oct-2015 12:34 am
நன்றி ராஜா !நலம் .தாங்களும் தோழமைகளும் நலம் தானே . 14-Oct-2015 12:33 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Oct-2015 6:00 am
கவிஜி அளித்த படைப்பில் (public) T. Joseph Julius மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Oct-2015 6:07 pm

மாற்றி மாற்றி
போட்டுக் கொள்ளும் சட்டையில்
அவள் கணவனாகவும்
அவன் மனைவியாகவும்
மாறிக் கொள்கிறார்கள்...

கடைசி வாய்
சோற்றை விட்டுக் கொடுத்து
விடுகிறார்கள்
பக்கத்து வீட்டு பூனைக்கு...

கால்வரை போர்த்தி விடும்
அவளின்
பின்னிரவு குளிரை
கால் கொண்டே போர்த்தி
விடுகிறான் அவன்..

விளையாட்டுப் பெண்ணாகவே
இருந்தவளுக்கு
நிலவை விட்டு செல்கிறான்
தான் இல்லா மாலைகள் நிரப்ப...

மழையோ வெயிலோ
ஒழுகி விடும் வீட்டுக்குள்
தன் நிழல் கொண்டே
வெளி
அடைக்கிறார்கள், இருவரும்....

தாழ்பாள் அற்ற
கதவுகளை
அந்த வீதியில்
யாரும் திறந்து விடுவதில்லை....

கவிஜி

மேலும்

நன்றி தோழர்... 30-Oct-2015 9:15 pm
நன்றி தோழர்... 30-Oct-2015 9:15 pm
மொத்த வரிகளும் மெத்தை அமைத்து கொடுத்தன ரசனைக்கு 29-Oct-2015 8:59 pm
சிறப்பான வரிகள் ! 22-Oct-2015 3:13 pm
thilakavathy - thilakavathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2015 1:19 am

உதிர்ந்து கிடக்கும் உன் நினைவுகளை
கோர்த்துக் கொண்டிருக்கிறேன் !
விழிகளில் உலாவுகிறாய் நீ !
விழி மூட மனமின்றி
தூக்கம் தவிர்க்கிறேன் !
செவிகள் உன் குரலையே
மொழிந்து கொண்டிருக்கிறது !
உச்சரித்துச் சிலிர்க்கிறது
உதடுகள் உன் பெயரை !
நீ கழற்றி வீசிய சட்டை அணிந்து
உன் வேர்வை வாசம் சுவாசித்து
உயிர்த்தெழுகிறேன் நான் !
நீ அருகிருக்கும் போது நான்
அறியாமல் போன காதல் !
சிக்கி முக்கி கல்லாய்
உரசிக் கொள்கையில்
பொறி கிளம்ப நீ மூட்டும்
வார்த்தை நெருப்பில்
தீ குளித்த தினங்களில்
பூமி பிளவாது புன்னகைத்து
நின்றது என் சுவாசங்களில்
முத்தமிடும் உன்
காதலை கண்டு தானோ !
தலையணையில்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 07-May-2015 1:57 am
காதலின் பிரிவு அருமையான கவிதை 07-May-2015 1:26 am
thilakavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2015 1:19 am

உதிர்ந்து கிடக்கும் உன் நினைவுகளை
கோர்த்துக் கொண்டிருக்கிறேன் !
விழிகளில் உலாவுகிறாய் நீ !
விழி மூட மனமின்றி
தூக்கம் தவிர்க்கிறேன் !
செவிகள் உன் குரலையே
மொழிந்து கொண்டிருக்கிறது !
உச்சரித்துச் சிலிர்க்கிறது
உதடுகள் உன் பெயரை !
நீ கழற்றி வீசிய சட்டை அணிந்து
உன் வேர்வை வாசம் சுவாசித்து
உயிர்த்தெழுகிறேன் நான் !
நீ அருகிருக்கும் போது நான்
அறியாமல் போன காதல் !
சிக்கி முக்கி கல்லாய்
உரசிக் கொள்கையில்
பொறி கிளம்ப நீ மூட்டும்
வார்த்தை நெருப்பில்
தீ குளித்த தினங்களில்
பூமி பிளவாது புன்னகைத்து
நின்றது என் சுவாசங்களில்
முத்தமிடும் உன்
காதலை கண்டு தானோ !
தலையணையில்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 07-May-2015 1:57 am
காதலின் பிரிவு அருமையான கவிதை 07-May-2015 1:26 am
thilakavathy - எழுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2015 6:38 pm

எழுத்து தளம், உறுப்பினர்கள் தளத்தில் படைப்பு சமர்ப்பிக்கும் பக்கத்தில், படைப்பு சமர்ப்பிக்கப்படும் போது முகநூலிலும் தானாகவே படைப்பு சமர்ப்பிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு தாங்கள் படைப்பு சமர்ப்பிக்கப்படும் முன் முகநூலில் சேர்க்க என்பதை தேர்வு செய்து முகநூலில் நுழைவதன் மூலம் தளத்தில் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் உங்கள் முகநூலிலும் சமர்ப்பிக்கப்படும். முயற்சித்து பார்த்து சொல்லுங்கள்.

மேலும்

அன்னையர் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள் 06-May-2015 8:28 pm
கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) சர்நா மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2015 9:27 pm


நண்பர்களே என்னுடைய கவிதை ஒன்று இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளியாகியுள்ளது.. 'அடையாளம் தேடும் முகங்கள்' என்னும் கவி கட்டுரை நண்பர்களே...

- கிருத்திகா தாஸ்...

மேலும்

நன்றி 09-Apr-2015 1:13 pm
தோழியே என் 'கட்டுரை' பகுதியில் இருக்கும் 'அடையாளம் தேடும் முகங்கள்' என்ற கவி கட்டுரையே இது மா.. .. 09-Apr-2015 12:50 pm
அதை நாங்கள் படிக்க முடியுமா ....பகிரவும் 09-Apr-2015 12:47 pm
நன்றி கார்த்திகா...... 09-Apr-2015 12:46 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த எண்ணத்தை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Nov-2014 9:18 am

தந்தையே எப்படிச் சாகும் உன் நினைவுகள்
-------------------------------------------------------
தந்தையே ...நீவீர்
இறந்துவிட்டதாய்
இன்றளவும்
நம்ப மறுக்கிறது மனம் ?

உம் வித்தாய் நானிங்கு
மிச்சமிருக்கையில்
நம் மரபணுக்கள்
நம் மூலம் மறுஉடல் புகுமெனில்
உம் மரணத்துடன் மடிந்திடுமா
மனதின் உணர்வுகள் ...

இருபது வருடங்கள்
சென்றாலென்ன ...
இருநூறு வருடங்கள்
வந்தாலென்ன ...
உம் இதயம்
உரைத்த மொழியே
என் தேசிய கீதம்
நம் பரம்பரைக்கும் பாடம் ..

நடை பயில
மரவண்டி தந்து
நான் அழுகையிலே
யானையாக (...)

மேலும்

கண்டிப்பாக பார்க்கிறேன் தோழா , மறு வருகைக்கும் நன்றி தோழா 25-Nov-2014 2:46 pm
நேரம் இருப்பின் muralitn wordpress com (மூன்று வார்த்தைகளுக்கு இடையில் dot போடவும்) என்ற தளத்துக்கு சென்று நன் எழுதியுள்ள "my dad " "my mom "பார்க்கவும் 23-Nov-2014 7:17 am
என் நிலையும் அவ்வாறே தோழி , நான் கல்லூரியில் 2 ம் வருடம் படிக்கும் போது என் தந்தை எங்களைவிட்டு மறைந்து விட்டார் , அவரோடு இருந்த நினைவுகள் நெஞ்சுக்குள் உயிர்கொண்டு உலவுகிறது தோழி , இறைவன் அவர்களின் ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும் , நன்றி தோழி வருகைக்கும் , புரிதலுக்கும். 22-Nov-2014 11:04 pm
ஆம் தோழா , இக்கவி எனது தந்தையின் நினைவுகளை என்னுள் என்றும் சுரந்துகொண்டே இருக்கும் என் மனதிற்கு நெருக்கமான கவி , நன்றி தோழா வருகைக்கும் , புரிதலுக்கும். 22-Nov-2014 10:54 pm
Rajesh Kumar அளித்த எண்ணத்தை (public) அஹமது அலி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-Nov-2014 7:49 am

படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.

இதை பற்றிய விரிவான வழிமுறையை எழுத்து குழும நண்பரில் ஒருவர் விரைவில் வெளியிடுவார். எழுத்து தளத்தில் இருந்தே உரிமை கோரும் முறையை அறிமுகம் செய்ய வழிவகை செய்வோம்.

மேலும்

நன்றி... !! விரிவான கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம் 24-Nov-2014 12:35 pm
முதலில் திருடனை தக்க ஆதாரத்துடன் பிடியுங்கள்... 22-Nov-2014 9:40 am
நன்றி 20-Nov-2014 6:34 pm
thilakavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2014 12:32 pm

அம்மா
குட்டை பாவாடை அணிந்த
சுட்டிப் பெண் இல்லை
நான் இப்போது !
முடி நரைத்து உடல் பருத்து
கன்னத்து சதை வழிய
கரு வளையம் விழி தாங்க
களைத்து கிடக்கிறேன்
ஒரே ஒரு கதை சொல்லு !
மொட்டை மாடியில்
விண்மீன் விளக்கொளியில்
பனி பெய்யும் முன் இரவில்
எனைக் கட்டியணைத்த படி
வானில் நீ உலவ விட்ட
வந்தியத் தேவனும்
உன் முந்தானை பிடித்து
முகம் துடைத்து நடந்த போது
உருண்டை சோற்றுக்குள் நீ
ஒளித்து வைத்த கதை நாயகரும்
இரை தேடும் இம்சையில்
பொய்க் கதையாகிப்
போய் மறைந்தார் !
அம்மா
ஒளியிழந்து கிடக்கிறது
உன் கண்கள் !
ஓசையற்று கிடக்கிறது
உன் குரல் !
உனை கட்டியணைத்து
ஒரு கதை

மேலும்

நட்புக்கு நன்றி வசந்த் 08-Apr-2015 11:31 pm
ராஜா நன்றி நன்றி நன்றி 08-Apr-2015 11:30 pm
எங்கே இருக்கிறீர்கள் திலகவதி .. மறுபடியும் இங்கு வாருங்கள் எழுத . தொடருங்கள் ( உடனே ) 29-Mar-2015 11:11 am
பனி பெய்யும் முன் இரவில் எனைக் கட்டியணைத்த படி வானில் நீ உலவ விட்ட வந்தியத் தேவனும் உன் முந்தானை பிடித்து முகம் துடைத்து நடந்த போது உருண்டை சோற்றுக்குள் நீ ஒளித்து வைத்த கதை நாயகரும்.....// கண்கள் பனிக்கிறது.. அருமை தோழமையே 29-Mar-2015 9:43 am
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) ஜெய ராஜரெத்தினம் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Nov-2014 8:42 am

------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------

உங்கள் கவிதைகளை பத்திரிகை / ஊடகங்களுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் அனுப்பி விட்டு அதில் வந்த பிறகு எழுத்தில் பதிவு செய்யுங்கள் .

என் சமிபத்திய எழுத்து கவிதைகள் வேறு பெயர்களில் இணையங்களில் பதிவு ஆன இணைப்புகள் கீழே .இன்னும் தோண்டினால் எத்தனை நகல்கள் வருமோ தெரியாது . எனக்கு எழுதுவது தொழில் இல்லை .ஆனால் நம்மில் சில பேருக்கு அது லட்சியமாக , கனவாக இருக்கலாம் . கவனமாக இருங்கள் .

https:// (...)

மேலும்

இப்படி ஒரு முகநூல் முகவரி இல்லை . செக் செய்தேன் . ஓடி விட்டானோ . பாருங்கள் . 23-Nov-2014 4:54 pm
செல்வராஜ் parankuntrapuramஎன்ற பெயரில் ஒரு நாதாரி எல்லா கவிஞர்களின் கவிதைகளையும் திருடி முகப்பத்தகத்தில் அநேகரின் பாராட்டை வாங்கிவிட்டான். அவனுக்கு முதலில் ப்ரண்ட்ஸ ரிகொஸ்ட் கொடுத்து பின்னர் அவன அவன் அடுத்த நிமிடமே அக்ஸப்ட் பண்ணுவான் பின்னர் தாழியுங்கள் அவனை. நான் அவனை திட்டியதால் என்னை அன் ப்ரண்ட் செய்து விட்டான். அவன் கவிதை திருடுவதில் நம்பர் 1. அவனை திருத்த முடியாமல் தவிக்கிறேன். அவன் முக புத்தக முகவரி Selvaraj parankuntrapuram 22-Nov-2014 9:31 pm
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. குறிப்பாக கவிதை திருடர்கள் ஜாக்கிரதை... சொற்களை கூடவா திருட வேண்டும்.. அறிவு கெட்ட ஜென்மங்கள்...நீங்கள்.... 22-Nov-2014 9:29 am
இதுவும் போச்சா..... அவ்ளோதான் ராஜ்.... 21-Nov-2014 3:39 pm
thilakavathy - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 12:11 pm

என்ன எதிர்பார்க்கிறது
இந்த வேடிக்கை விதி
என்னிடம் !

வெறி கொண்ட வேட்டை நாயாய்
மூச்சிரைக்க என்னையும்
இழுத்துக் கொண்டு
என் முன்னே செல்கிறது
பிரயாசைகளும் தோல்விகளும்
நிறைந்த பாதையில் !

வெறுமை மிகக் கொண்டு
வெட்டி விட நினைத்து
முகம் திருப்பி நடக்கிறேன்
பிடரியில் கை வைத்து
பின் தொடர்ந்து வருகிறது
என் நிழல் போல் விதி !

சும்மா இரு என்று
சப்தமாய் அதட்டி
கை கட்டி கண் மூடி
வாய் பொத்தி கிடந்தேன் !
உச்சந் தலை ஏறி ஒய்யாரமாய்
சம்மணமிட்டு அமர்ந்தது விதி !
விக்ரமாதித்தனின்
வேதாளம் போல !

என்ன எதிர் பார்க்கிறது
இந்த வேடிக்கை விதி
என்னிடம் !!!

மேலும்

நன்றி தோழரே 08-Apr-2015 11:27 pm
நன்றி 08-Apr-2015 11:26 pm
நன்றி வசந்த் 08-Apr-2015 11:26 pm
நன்றி தோழமையே 08-Apr-2015 11:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (114)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
தீனா

தீனா

மதுரை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவர் பின்தொடர்பவர்கள் (114)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (114)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே