மலர்ந்தது காதல் மலர்

.
உலகது குளிராத
நிலவது ஒளிராத
முற்றாத ஐப்பசியின்
முதல் மழையில்
முகம் தெரியா
திகிலடர் வனத்தில்
முழுதாய் என்னைப்
படம் பிடிக்க
விழுந்தது என்மேல்
ஒரு மின்னல்!

சிலையென நினைந்து
சிறுவிழி கூட்டி
சித்திரப் பாவையின்
அருகில் செல்ல…….
மலையென என்னை
மலைக்க வைத்தது
கலை எழில்
உருவில் பெண்ணழகே !!

வெந்த வயலொத்த
நொந்த மனதில்
விந்தைச் செடி
ஒன்று பூத்திருக்க….
சிந்தனை ஏதும்
செய்திடும் முன்னரே
வந்து மலர்ந்தது
காதல் மலர்!

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (12-Oct-15, 4:53 pm)
பார்வை : 196

மேலே