அடி கொடுத்த முல்லா

அடி கொடுத்த முல்லா:


முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒரு நாள் புது பானை ஒன்றை வாங்கினார். "பையா! இந்தப் பானையை எடுத்துக் கொண்டு கிண‌ற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா" என்று கூறினார்.

பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு புறப்பட்டான். முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.

பையன் திரும்பி வந்து "என்ன எஜமானே" என்று கேட்டான்.

இந்த பானை புத்தம் புதிது . அதிகப் பணம் கொடுத்து வங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாக கையாண்டு உடைத்தால் உனக்கு அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஓங்கி அறைந்தார்.

பையன் திடுக்கிட்டுத் திரும்பி "என்ன எஜமானே, பானையை உடைத்தால் தானே அடிப்பேன் என்று கூறினீர்கள். நான் தான் பானையை உடைக்கவே இல்லையே, பின் எதற்க்காக அடித்தீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு முல்லா "பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன்?, உடைந்து போன பானை திரும்ப வருமா?, அதற்க்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்து விட்டேன். இந்த அடியை நினைவில் வைத்துக் கொண்டு நீ பானை விஷயத்தில் கவனமாக இருப்பாய் அல்லவா?!!!" என்று பதிலளித்தார்.

மனதிற்குள் புலம்பியவாறே பையன் நீர் பிடிக்கப் போனது தனிக்கதை.

எழுதியவர் : முக நூல் (15-Oct-15, 7:47 pm)
Tanglish : adi kodutha mulla
பார்வை : 472

மேலே