சொலவடைகள்

சொலவடைகள் பற்றி தேடியபோது ட்விட்டர் சொலவடைகள் என்ற பக்கம் கிடைத்தது. படிப்பறிவில்லாத மக்கள் சில சமயங்களில் விரக்தியில் சொல்லுகின்ற வார்த்தைகள் தான் சொலவடைகள்.

அதில் ஒரு ஆழம் இருக்கும். அதீத சோகம் வெளிப்படும். அதே சமயம் எந்த சூழ்நிலையில் சொல்லியிருப்பார்கள் என்பதை யூகிக்கத்தான் முடியும்.

ஆனால் நான் பார்த்த இந்தப் பக்கத்தில் சொலவடைகளை funவடைகள் ஆக்கியிருக்கிறார்கள். என் மகனின் புதிய கணிணியில் Word இன்னும் இதில் பதிவிறக்கம் செய்யாததால் காபி, பேஸ்ட் செய்ய இயலவில்லை. (இருந்தாலும் எனக்கு அதைச் செய்யத் தெரியாதுங்கறதை சொல்லக் கூடாது).

கீழே இருக்கறதை படிக்கிறப்ப கொஞ்சம் சிரிப்பு வருதா பாருங்க....

வேண்டா வெறுப்புக்கு பிள்ளையப் பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.

வாழ்க்கை பனைமரம் மாதி. ஏறுனா நுங்கு....இல்லேன்னா சங்கு.

பகல்லயே பசுமாடு தெரியாது....ராத்திரில எருமை மாடா தெரியப் போகுது...?

மண்டை மேல கொண்டையாம். இந்தியா, பாகிஸ்தான் சண்டையாம். (!!!!!!)

பணக்காரி வீட்ல இருக்க கடனும், செவத்தவ உடம்புல இருக்க அழுக்கும் வெளில தெரியாது.

கப்பல்ல பொண்ணு வருதுன்னா....எனக்கொன்னு எங்கப்பனுக்கு ரெண்டுன்னானாம். (!!!!!!!)

லச்ச லச்சமா பணத்துக்கு கனவு கண்டானாம். சோத்துக்கு அடகு வச்சது இட்லிக் குண்டானாம்.

இருக்க இடம் கொடுத்தா...'கட்டிங்குங்கு' காசு கேப்பானாம்.

ஏரு ஓட்றவன் இளிச்சவாயனா இருந்தா, மாடு கூட மச்சான்னு கூப்பிடுமாம்.

ஊட்டிக்கு வேறொருத்தன் ஃபிகரை நீ தள்ளிட்டுப் போனா, உன் ஃபிகரை ஒம்போது பேர் தள்ளிட்டுப் போவான்.
______________________________________________

இந்த மாதி போகுது அந்தப் பக்கம். சினிமால வர்ற 'பஞ்ச்' டயலாக்கெல்லாம் கூட இந்த ரகம் தான் போல.

'...சிங்கம் சிங்கிளாத்தான் வரும், பன்னிங்கதான் கூட்டமா வரும்'...

'ஒருவாட்டி முடிவு பண்ணாக்க என் பேச்சை நானே கேக்கமாட்டேன்'....

நான் ஒரு தரம் சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.......'
_____________________________________________

எல்லாம் படித்தவுடன் சொலவடைகள் மேல் இருந்த ஈடுபாடே குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அட.....போங்கப்பா....எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்.

('கவிதை வானம்' (அ) சொலவடைகள்' என்ற பக்கத்தைப் புரட்டுங்கள் கூகுளில்)

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஞானசேகர (21-Oct-15, 10:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 3456

சிறந்த கட்டுரைகள்

மேலே