நவராத்திரியும் பெத்திமாவும் --கயல்விழி

நாத்திகம் பேசாதே இன்று
நவராத்திரி பண்டிகை
பட்டையோடு பவ்வியமாய் (இது போன்ற நாட்களில் மட்டும் )
சித்தி .

கடவுளை காலைக்கடன்
முடிக்க விடுங்க
நாத்திகம் பேச மாட்டேன்
அரைத்தூக்கத்தில் நான் .

தேவார திருப்புகழ்
பின்னணியில் ஒலிக்க
எழுந்திரடி முதேவி ..
மந்திரம் பாடும் அக்கா

ஸ்நானம் செய்துகொள்
பிடித்த பினியெனும் தீரும்
பதினெட்டு வருடம் பல்லுக்கு
பற்பொடி காட்டாத பாட்டி .

குளிருது மா கொஞ்சம்
உறங்க விடேன்
போர்வைக்குள் புகுந்துக்கொண்டு
கெஞ்சி கேட்கும் தம்பி .

கோயிலுக்கு போகணும்
சீக்கிரம் சீக்கிரம்
சக்கரை பொங்கலுக்கும்
கடலை சுண்டலுக்கும்
துடிக்கும் நாவோடு தாத்தா .

கல்வியோ செல்வமோ வீரமோ
எதுவும் கிடைக்காததால்
கடவுளை சபித்தபடி என் வீட்டு
பெத்திமா.(கிளி )

எழுதியவர் : கயல்விழி (22-Oct-15, 7:11 am)
பார்வை : 1903

மேலே