கருத்தில் கொள்…

உயிரதைக் காக்கும் கவசமதை
உடலில் அணியச் சோம்பலினால்
உயிரை யிழக்கும் மனிதர்முன்
உறுதுணை யாக்கிடு அதையணிந்தே,
பயிரது சிறிதாய் இருக்கையிலே
பாது காக்கக் கற்றுவிடு,
உயிர்தான் உயர்ந்தது வாழ்வினிலே
உணர்ந்ததைக் கொண்டிடு கருத்தினிலே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Oct-15, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே