பண்டிகை கால மருமகள்

விடியற் காலை எழவேண்டும்
வித்தியாசமான கோலமிட..

வித விதமான‌ சுவையோடு
மூன்று வேளை பதார்த்தமும்
முனகாமல் செய்யவேண்டும்....

தினம் தினம் பெருக்கி துடைக்கும் வீடுதான்
இன்று மட்டும்
கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்...

வாசல்வரை மஞ்சள் குங்குமம் வைத்து
தோரணமும் பூச்சரமும் அழகாக‌
தொங்கவிட வேண்டும்....

வீட்டு மூலையில் தெரியாமல்
ஒரு ஒட்டடை பார்த்து சிரித்தால்
பெரியோரின் பாட்டை வாங்க வேண்டும்....

படையல் போடும் நேரத்தில்
வைத்த பொருளை காணவில்லை என்றால்
என்ன ஞாபகமோ என்ற சுடு சொல்லை
கேட்க வேண்டும்....

முகத்தை தூக்கி வைக்காமல்
பார்த்து சிரிக்கும் போது
பல் இளித்து சிரிக்கவேண்டும்....

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (25-Oct-15, 10:51 pm)
பார்வை : 870

மேலே