இடியாப்ப மனிதர்கள்

நம்மில் சிலர் ..
இடியாப்ப மனிதர்கள் ..!
தங்கள் உள்ளே
சிக்கல்களை கொண்டிருந்தாலும்

இவர்கள்..
தூய்மையானவர்கள்..
சுவையானவர்கள்..
எளிதில் ஜீரணிக்கப் படக் கூடியவர்கள்..

இவர்கள்
பாயா, தேங்காய் பால்,
சர்க்கரை, வெறும் பால்..
என்று குறிப்பிட்ட மனித ரகங்களோடு
மட்டும் ஒத்து போய்விடுவார்கள்..

இவர்கள்
கொஞ்சம் காரம் மிகுந்த
வெங்காய சட்டினி போன்றவர்களோடு
முரண் படுவதோடு ..
வம்பு வேண்டாம் என
ஒதுங்கியும் போய் விடுகிறார்கள்!
கூடா நட்பு கொள்வதுமில்லை!

இவர்கள்..
சூடாக இருந்தாலும்..
இல்லாது குளிர்ந்தாலும்..
சுவையோடு இருப்பவர்கள்..
முகம் சுளிக்காதவர்கள்!

இவர்கள்..
பக்குவம் நிறைந்தவர்கள்...
யாரும் தங்களை இப்படித்தான்
எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று பிடிவாதம் பிடிக்காதவர்கள்..
வறட்டு சப்பாத்தி மனிதர்கள் போலன்றி!

அதனால்தான் சொல்கிறேன்..
இந்த இடியாப்ப மனிதர்கள்
இலகுவானவர்கள்..
மேலானவர்கள்..
மென்மையானவர்கள்!
மொத்தத்தில் ..
பிரச்னை தராதவர்கள்!
சில பிரச்னைகளுக்கு
தீர்வு தருபவர்கள்!

இடியாப்பத்தை நீங்கள்
வெறுப்பவரா என்ன?
இல்லையென்றால்..
தேடி கண்டு பிடியுங்கள்..
இந்த இடியாப்ப மனிதர்களை!
வாழ்வின் சுவை கூடும்!

எழுதியவர் : பாலகங்காதரன் (26-Oct-15, 12:00 pm)
பார்வை : 148

மேலே