ஒரு மாலை பொழுதினில் !

======================
சில
நிமிடங்கள் முன் பார்த்த முகம்
புது முகத்தை உறவால் புதுபிக்க
தெரியிவில்லை

பயணித்த பேருந்து காணலில்
மறைந்து போல
காற்றிலே கண்ணிலிருந்து கரைந்தது
அவள் முகம் !

அது
இருவேறு சாலை சந்திப்பு
ஆனால்
நான் மட்டும் தனியாக !

நான்
இறங்கிய பேருந்தில் -என்
காதல் மட்டும் பயணித்தது
அவள் புன்னகையுடன் !

புயலில் சிக்கிய காகிதம் போல
காதல்
மண்ணில் பட்டு வலி தாங்காமல்
பயணித்தது அந்த பேருந்து பின்னால் !

சாலையில் உடைந்த கன்னாடிகுட
என்னை
பிரதிபலிக்க மறுத்தது !

பக்கத்து தோட்டத்திலிருந்த
சூரிய மலரும் முகம் சுளிர்த்து
மேற்கே திருப்பியது !

எல்லோரையும் போலவே
எந்த சலனமும் இன்றி மறைந்த
பேருந்திற்கு பின் தெரிந்தது
என் வீட்டிற்க்கான வழி
அந்த
மாலை பொழுதில் !
==========================

எழுதியவர் : சி.வேலு (6-Jun-11, 6:42 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 481

மேலே