துடித்துக் கொண்டிருக்கிறது

உன் நினைவுகளால் தினமும் என் முகம்
வாடிவதங்கிப் போகின்றது
என் கண்கள் ஏனோ தூங்கமுடியாமல்
அடம் பிடிக்கின்றன
ஏக்கப் பெருமூச்சுகளுக்கு என் சுவாசங்கள்
சொந்தம் கொண்டாடுகின்றன
உன் பிரிவால் என் காதல் படகு துன்பக் கடலில்
மூழ்கிக் கொண்டிருக்கிறது
காதல் பாட்டுக்கள் காதில் விழுந்தால் கண்ணீர்
பொத்துக்கொண்டு வருகின்றது
நீ வருவாயென்ற நப்பாசையில் இதயம் பாவம்
இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறது!
வருவாயா?

எழுதியவர் : பொன் அருள் (8-Nov-15, 2:09 am)
பார்வை : 127

மேலே