பள்ளிக்கூடம் சென்றார்கள்
கூவத்தின் கரையில் உள்ள
குடிசைக் குடியிருப்புகளில் வசிக்கும்
எட்டு வயது எழிலும் அவன் தங்கை தாமரையும்
இன்று பள்ளிக்கூடம் சென்றார்கள் - முதல் முறையாக -
தாழ்வான சேரிகளில் வசிக்கும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை
அரசு , மாநகராட்சிப் பள்ளிகளில்
தற்காலிகமாகக் குடியேற்றியபோது!