ஹைக்கூ துளிகள் - கடல்

முத்தான பூமியின் மூத்த மகளே
சத்தான மீன்களை தரும் கடலே
சித்தம் அழகுற முத்துக்கள் அளிப்பவள்
நித்தம் மீனவர்களின் மிகுபசி தீர்ப்பவள்.
அலைஎன்னும் கைகளை கொண்டவள் -
எரி மலை மகளையும் வெற்றி கண்டவள்
கலை பல வளர்க்கும் கலைஞரும் - வள்ளுவர்
சிலைதனை நிறுவியது உன் காலடியில்
நீர் நிலைகளுக்கு நீயே ஆதாரம்
நீ இல்லையென்றால் பூமிக்கு சேதாரம்
நீராவிகளோ உன் முதல் தாரம்
நீர்திவளைகளோ உன் மறுதாரம்
கலங்கரை விளக்கங்கள் உன் கண்கள்
கலம் கரை அழைக்கும் இரவு பெண்கள்
- K.B.பாலாஜி

எழுதியவர் : K.B.பாலாஜி (23-Nov-15, 12:11 pm)
பார்வை : 1884

மேலே