ஹைக்கூ துளிகள் - மரம்
நிலமகள் மடியில் நங்கூரமிட்டு அமர்ந்து,
வானமகள் விரிமுகம் கண்டு விழித்து ,
காற்றின் கறைபடிந்த கற்பை மீட்டெடுத்து,
நீரையே நிலமகளுக்கு பாலாக ஊட்டி,
நெருப்புக்கு இரையானாலும் நிலத்துக்கு உரமாவேன் .
பஞ்சபூதங்களின் பணியாளன்
வண்ண பறவைகளின் வசந்த கால ஊஞ்சல்
கற்கால மனிதனின் மாட மாளிகை
தற்கால மனிதனின் தன்னலமற்ற சேவகன்
பாருக்கே பசுமை ஆடை போற்றிய பேகன்
இயற்கையின் உயிர்நாடி !
ஆனாலும் நான் ஓரறிவு பெற்றவன் .
- K.B.பாலாஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
