ஹைக்கூ துளிகள் - மரம்

ஹைக்கூ துளிகள்  - மரம்

நிலமகள் மடியில் நங்கூரமிட்டு  அமர்ந்து, 
வானமகள் விரிமுகம் கண்டு விழித்து ,
காற்றின் கறைபடிந்த கற்பை மீட்டெடுத்து, 
நீரையே நிலமகளுக்கு பாலாக ஊட்டி, 
நெருப்புக்கு இரையானாலும் நிலத்துக்கு உரமாவேன் .


பஞ்சபூதங்களின் பணியாளன் 
வண்ண பறவைகளின் வசந்த கால ஊஞ்சல் 
கற்கால மனிதனின் மாட மாளிகை 
தற்கால மனிதனின் தன்னலமற்ற சேவகன் 
பாருக்கே பசுமை ஆடை போற்றிய பேகன் 
இயற்கையின் உயிர்நாடி !
ஆனாலும் நான் ஓரறிவு பெற்றவன் .
- K.B.பாலாஜி

எழுதியவர் : K.B.பாலாஜி (23-Nov-15, 12:13 pm)
பார்வை : 1030

மேலே