தீர்க்கத்தரிஷி

உன் கண்களின் வழியே
என் கடந்த காலத்தையும்
இனி கடக்கும் காலத்தையும்
கணித்துவிடுகிறேன்........

உன் மவுனத்தின் வழியே
நமக்கான வார்த்தைகளை
மொழிபெயர்த்து
கொள்கிறேன்........

ஆகா
இந்த நூற்றாண்டின்
ஆகாச்சிறந்த
தீர்க்கத்தரிஷி
நானாக தான்
இருக்கும்

எழுதியவர் : வேலு வேலு (23-Nov-15, 2:42 pm)
சேர்த்தது : பி.வேலுச்சாமி
பார்வை : 96

மேலே