அன்பிற்காக ஏங்கிய காலங்கள்

துள்ளிக் கொண்டு சுற்றித் திறியும் காலத்தில்
வறுமையில் சென்றது பல காலம்..!

அன்னை மடியில் உறங்க ஆசைப் பட்ட
காலத்தில் அன்னை உறங்கி விட்டால் அக்காலம் ..!

தந்தை அரவணைப்பில் அன்பிற்காக
ஏங்கிய காலம் ஒரு காலம்..!

பருவ வயதில் காதலியைத் தேடிச்
சென்று பணத்திற்காக காதலி விட்டுச்
சென்றது என் பருவ காலம்..!


இவை அனைத்தும் தாண்டி கிடைத்தது
ஒரு நட்பு ., என்னவென்று சொல்ல அதுவும்
குடுத்துவைக்கவில்லை இந்த பரதேசிக்கு..!

இன்னும் காத்திருக்கிறேன் எனக்காக ஒரு உறவு
இவை அனைத்தையும் சமர்பிக்க வரும் என்று..!

அன்பிற்காக ஏங்கும் ஒரு தோழனின் மனதைத்
தொடுத்துள்ளேன் இங்கு அன்பு கலந்து..!

எழுதியவர் : சோ.வடிவேல் (30-Nov-15, 5:27 pm)
பார்வை : 254

மேலே