பொய்யின் புல்லாங்குழல்

இது
பொய்யின் புல்லாங்குழல்
உணர்வுக் காற்றினில் பெருகி வரும்
இதில் ராகங்கள் கீதங்கள்
இதன் பெயர் கவிதை !
இதன் விரிந்த ஆலாபனை
காவியங்கள் !
காற்றில் மிதந்து வரும் குழலோசை போல்
நெஞ்சில் தாளமிடும் இதன் இன்னிசை !
வாசிக்கும் போது குழல் இனிமை
வாசிக்கும் போதுதான் கவிதையும் இனிமை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Dec-15, 6:56 pm)
Tanglish : poyyin pullangulal
பார்வை : 294

மேலே