எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை

நான் நடக்கும் போதும்,
உண்ணும் போதும்,
உறங்கும் போதும்,
கவிதைகளுக்கான வார்த்தைகள்
என்னை சுற்றியே வட்டமிடுகின்றன,,
என் புலன்களை புதுப்பித்துக்கொண்டு...

எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை
கவிதையோடு வாழவும்,
கவிதையோடு பேசவும்,
கவிதையோடு உறங்கவும்
ஏதுவான உன்னமான தருணங்கள்..,

என் அஞ்சுவுக்கு ஆறுவயது
அவள் எட்டுவைக்கும்போதும் எட்டுத்தொகையும்,
அவள் படுத்துறங்கும் போது பரிபாடலும்,
வகிடெடுக்கும் வாரும்போது வளையாபதியும்,
குதித்து விளையாடும்போது குண்டலகேசியும,
மழலைக்குறல் கேட்கும்போது திருக்குறளும்,
மீண்டுமொருமுறை அத்தியாயமெடுக்கின்றன,
அவள் கண்ணங்களின் கருணையால்..

என்றோ ஒருநாள் அவள்
Twinkle twinkle little star
பாடினாள்,அன்றிலிருந்து
வானைவிட்டு இறங்கிவந்த
இரண்டு விண்மீன்கள் இன்றுவரை
அவள் காதுகளையே அலங்கரிக்கின்றன..காதணிகளாய்...

இப்படி எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை,
கவிதைகளோடு வாழும் வாழ்க்கை

எழுதியவர் : தாஸ் (2-Dec-15, 11:56 pm)
பார்வை : 100

மேலே