நிவாரணம் போதாது
நீ வா ரணம் தெரியும்
அப்போது தான்,
நிவாரணம் போதாது
என்பதுவும் புரியும்;
கணக்கெடுத்து
கொடுக்கப்படும் போது
கட்சிக்காரங்களை
மட்டும் கணக்கெடுத்து
கணக்கு காட்டி விடாதீர்கள்!
தொண்டன் தேர்தல் நேரம் செய்தது
எல்லாம் பழக்கதோசத்தில்
மேல்மட்டம் செய்யுமாயின்,
வெட்ட வெளிச்சமாகிவிடும்,
மழை வந்தால்
வெள்ளைக்கோழி என்பது தெரிந்து விடும்,
வெளுத்து விடும்;
தெய்வம் இப்போதெல்லாம்
அப்படியில்லையாம்;
அன்றே கொல்கிறதாம்,
இதுவே இன்றைய பாடம்...