நிலவுநதி -1

இரவு நேர நிலவு
நெளிந்தாடும்
அழகு நதியே ..,

வளைந்தோடும்
இடமெல்லாம் வளமாய்
மாற்றி போகின்றாயோ ..,

இரைச்சலோடு
மலையினின்று
இறங்குகிறாய்
நீ இன்று ..,

புன்முறுவலோடு
வரவேற்று
விளையாடுகின்றோம்
உன்னோடு ..,

தாகம் தீர்க்கும்
கார்மேகம் மழை பொழிந்தது
எங்கள் கழனியினிலே

நெற்கதிர்கள் எல்லாம்
செழித்தோங்க
கால்வாய் எல்லாம்
நிறைந்தோட ..,

எங்கும் வளமை வாழ்வாக
புன்செய் ,நன்செய் நிலம்மாக
தாமிரபரணி நீர் வேண்டும்

காலமும் உன்னை
தேட வேண்டும் .

முகில் கொண்டு வர வேண்டும்
மூளை முடுக்கெல்லாம்
செழிக்க வேண்டும் .

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (12-Dec-15, 1:26 am)
பார்வை : 83

புதிய படைப்புகள்

மேலே