மழையே
![](https://eluthu.com/images/loading.gif)
மழையே !
இன்னும் நீ பெய்தழிப்பாய் என்று
இங்கும் அங்கும்
தகவல்களின் உலா
வானிலை அறிவிப்பு முதல்
வாட்ஸ்-அப் வரை !
உன்னால் விளைந்த
பாதிப்புகளால்
உனக்கே அழுகை
முட்டிக்கொண்டு வருகிறதோ ?
கருணை வள்ளலே
கண்ணீர் சிந்திவிடாதே !
அடக்கிக்கொண்டு
வானவீதியில் நடமாடு !
அழைக்கும் போது மட்டும் வா !
உன்னை ....
கண்டிக்கவில்லை
கனிவாய்தான் சொல்கிறோம் ....
நாங்கள் எங்களை
ஆயத்தப்படுத்திக் கொள்ள
அவகாசம் கொடு !