வாடும் மனம்

இருளில் தான் நிலவு பிறந்தது
வலியில் தான் காதலும் வளர்ந்தது

இருளின்றி நிலவில்லை
நிலவின்றி இருள்களும் அகல்வதில்லை

வலி இன்றி காதல் இல்லை
காதல் இன்றி வலிகளும் மறைவதில்லை

கொண்ட காதல் என்னை கொல்ல
நித்தமும் நினைத்து
நித்திரை இழந்து மனம் வாடும்

வாடும் மனம் இருளை நாடும்
தனிமையில் இருந்து அவள் உறவை தேடும்

தேடல்கள் நீளும்
முடிவின்றி ஓடும்
அவள் கை பிடிக்கும் வரை!

பிரதீப் ஸ்ரீ

எழுதியவர் : பிரதீப் ஸ்ரீ (19-Dec-15, 9:43 am)
Tanglish : vaadum manam
பார்வை : 415

மேலே