காதல் இன்றி

தொட்டால் சுருங்குவது
செடியல்ல, காதல்மனம்

பட்டால் தெரிகின்றது
பாடல்ல, காதல் வடு

நினைத்தால் இனிக்கின்றது
இனிமையல்ல, காதல் சுகம்

அணைத்தால் அணைப்பது
கரங்களல்ல, எண்ணங்கள்

அள்ளினால் குறையாதது
கடலல்ல , அன்பு

காக்க காக்க காத்திருப்பது
நேரமல்ல , ஏக்கம்

துணிச்சலும் உறுத்தலும் வருவது
வீரத்துக்கல்ல , காதலுக்கு

நற்சான்று கொடுப்பது ஒழுக்கத்திற்கு
காதலுக்கல்ல , இது அன்புக்கு

உயிரையும் பணயம் வைப்பது
சாதனைக்கல்ல , காதலுக்கு

ஜெயிப்பது காதல் உண்மைக்காக
பெருமைக்கல்ல , அன்புக்காக

உண்மை அன்பு புனிதமான காதல்
காதல் இன்றி வாழ்வே பூஜ்யம்

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Dec-15, 11:51 am)
Tanglish : kaadhal indri
பார்வை : 115

மேலே