சாபம்

செத்த மீன் கருவாடும்
சுவைக்க உண்ணும் உணவாகும்!

சிரிப்பில்லா சிந்தனையும்
செருக்கின்கால் சவமாகும்!

காலை முதல் மாலை வரை
காலந்தள்ளும் வேலை பளு!
காசு பணம் படைத்தவர்க்கோ
காலமெல்லாம் நோயின் வழு!

சுகமாய் வாழ்வதற்கே
சமாதானங்கள் சாசுவதமா!
கோபமாய் கேவலங்கள்
சாபமாய் வாழ்வதேனோ!

எழுதியவர் : கானல் நீர் (23-Dec-15, 8:27 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : saabam
பார்வை : 147

மேலே