நானும் நீயும்
நானோர் நதி
நீயென் பூமி
உனையன்றி எனை ஏந்த
யாருண்டு ?
நானோர் தூசி
நீயென் வெளி
நீயின்றேல்
எனக்கேது இருப்பு ?
நானோர் நிகழ்வு
நீயந்தக் காலம்
நீதானே
எனை நானாக்குகிறாய்.
நானோர் வார்த்தை
நீயென் மொழி
உன் உயிர் மெய் தானே
என் உயிர்மை
நானோர் துளி
நீயென் விழி
உன்னால் தானே என்
கருவும் உருவும்

