நான் மரணித்தப் பின்

நான் மரணித்தப் பின்

நான் மரணித்த பின் .........
யாரவது கேட்டால் ......
நான் யாரென்று ......


ஒற்றை வார்த்தையில்
என் மனைவி சொல்வாள்
"ரௌத்திரன் " என்று ......

வாரிசுகள் ......
"தரித்திரன் " என்பர் .....

உடன்பிறந்தவர் ...
" இயந்திரன்" என்பர் ......
நண்பர் .....
" விசித்திரன்" என்பர் ........

"அற்புதன் " என்பாள் .....
என் தாய் மட்டும் .....
உயிருடன் வாழ்ந்திருந்தால் .........

எழுதியவர் : கீதமன் (29-Dec-15, 7:46 pm)
பார்வை : 134

மேலே