என் அன்பு சாய் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இறையருளோடு ....

இன்று ஒன்றாம் அகவையில் ....

ஓய்யாரமாய் அடியெடுத்து வைக்கும்

எங்களின் தங்க தமிழ் மகளே !........

என் தங்கை பெற்ற திரு மகளே .....

நலமும் .. வளமும் பெற்று

வாழிய நீ பல்லாண்டு ........

என உளமார வாழ்த்துகின்றேன் ......

புன்னகை பொன் மலரே ....

உன் புன் சிரிப்பில் விடியட்டும் ....

இனி அகிலத்தின் நாட்கள் எல்லாம் ....

எங்களின் மூன்றாம் பிறையே .....

இனி ஏற்றங்கள் நிறையட்டும் உன் வாழ்வில் ....

பாசப் பனி மலரே ....

தடை பல கடந்து ...... சிகரம் கண்ட

எங்கள் சிங்கார பொன்மணியே .

இமயம் கூட இனி உன்னை

அண்ணாந்து பார்க்கட்டும் ....

வளமும் நலமும் தந்து

இறையருள் என்றென்றும் ...

உன்னோடு இருக்கட்டும் ....

உயிரோவியமே ..... ....

நீ பிறந்த இந்நாளில் உன்னை ......

அள்ளி அணைத்து வாழ்த்து சொல்ல ......

ஆயிரமாயிரம் ஆசைகள் உண்டு என்னுள்ளே ....

காலத்தின் கோலத்தால் கடல் கடந்து நிற்கின்றேன் .....

என்ற போதும் .....

உணர்வுகளால் உச்சி முகர்ந்து

இச் என்று முத்தம் பதித்து ....

இதோ வாழிய நீ பல்லாண்டு

பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு

அந்த எல்லாம் வல்ல இறையருளோடு

என உளமார ..... வாழ்த்துகின்றேன் ......

இங்ஙனம் உன் அன்பு மாமன் ....

எழுதியவர் : கலைச்சரண் (30-Dec-15, 10:22 am)
பார்வை : 22567

மேலே