அர்த்தம் பார்க்கும் பார்வையில் சொல் நயத்தில்

மெழுகு
நீ எனில்
அதில்
எரியும்
திரி நான்

கோபத்தில் கூறும் அர்த்தம்
~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எரிய எரிய
நீ உருக வேண்டும்.

பாசத்தில் கூறும் அர்த்தம்
~~~~~~~~~~~~~~~~~~~~

நீ உருகுவதை தாங்க
முடியாமல் நான்
எரிகிறேன்...

நான் சாம்பலாகும்
பொழுது எனக்காக
நீ உருகுவாயா?!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jan-16, 12:59 pm)
பார்வை : 239

மேலே