4 எழுதக் கொஞ்சம்

விசேஷ வீட்டில்
விளையாடிய குழந்தை
சுமந்து செல்கிறது ...

சுண்ணாம்பின் சுவடுகளை !!

*******************************************

கவிதை என்பது
இரசித்தவனுக்கும்
இரசிப்பவனுக்கும்

இடையில் ஊரும்
புரிதல் ....

***********************

பூட்டிய வீட்டின்
கண்ணாடி ஜன்னல்கள்

பகலில் வெளியின்
வெளிச்சத்தையும்

இரவில் அறையின்
இருட்டையும்

யாருக்கோ
சொல்லிக்கொண்டே இருக்கின்றன ........

*************************************

எழுதியவர் : நிலாநேசி (6-Jan-16, 5:02 pm)
Tanglish : sinnach sinnathai
பார்வை : 88

மேலே