எல்லாம் அவன் செயல்
தலைவரை நிரப்பியது
போதாது என்று தரை
முழுதும் சிதறவிட்டு
அருகில் வாசம் சுமந்து
விழுந்து கிடக்கும் தந்தையின்
நிலைக்கு பின்னால் தெளிவாய்
தெரிகிறது கையேந்தும் மகளின்
எதிர்காலம்....
பாதங்களை பற்றி அழு...
பசிக்கிறது என்று சொல்லி அழு...
பாவமாய் பார்...
மந்திரங்கள் சொல்லி தருகிறாய் இன்று....
எனில் நாளை....?