தலைக் குனிவு

தாழ்ந்துதான் போகிறது
என் சிரம்...
அரை வயிற்று கஞ்சி
குடித்து
அரையில் ஒரு
கந்தலதனால்
அரையுடல் மறைத்து
அல்லும் பகலும்
வியர்வையிறைத்து
அகிலத்தின் பசிப்போக்கி
அடுத்த வேளை
உணவுக்காய்
அல்லலுறும் உழவனை
கண்டு
அஃறிணையாய் அகன்று
வந்து
அன்னத்தில்
கைப்பதிக்கும் நொடி!!!

எழுதியவர் : Daniel Naveenraj (8-Jan-16, 10:45 am)
Tanglish : thalaik GUNIVU
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே