காத்திருக்கும் போது, காதலிக்காக

பார்வைகளை
குவிக்கிறேன்
வழியெல்லாம்!

புன்னகையை
கரைக்கிறேன்
பொறுமை தீர!

கோபத்தை
வார்க்கிறேன்
கொடுஞ்சினமாய்!

வார்த்தைகளை
கோர்க்கிறேன்
மௌனத்தில்!

வாஞ்சையுடன்
நோக்கினேன்
வருவாளா, மாட்டாளா? என்று...

எழுதியவர் : செல்வமணி (10-Jan-16, 10:05 am)
பார்வை : 304

மேலே