சலாவு 55 கவிதைகள்

பூத்து உதிரும் பூக்களை ..
கூந்தலில் ஏற்றிய நீ ..
என் நெஞ்சில் பூத்த காதலை ..
ஏற்க மறுப்பது ஏன் ..

நீ பெண்ணே நீ ...

என் மூச்சில் சுவாசம் நீ
என் கண்களின் ஒளி நீ
என் நாவில் மொழி நீ
என் இதயத்துடிப்பு நீ
என் மனதின் நினைவு நீ
என் உயிரில் அமைதி நீ
என் வாழ்வின் பாதை நீ

நீ பெண்ணே நீ ..

தன்னை மறந்து
அன்பு வைத்தது
உன் பிழையென்றால்.
நான் செய்த முதல் பிழை
உன்னை நினைத்து நினைத்து
என்னை மறந்தது தான் .
...........
..........................................சலா,

எழுதியவர் : சலாவு இப்ராஹிம் (10-Jan-16, 11:30 am)
பார்வை : 96

மேலே