காற்றுக்கு ஒரு தூது

காற்றிற்கு ஒரு தூது

காற்றே காற்றே கொஞ்சம் நிற்பாய்
காதலனுடன் சேர வழி வகுப்பாய்
கார்மேகம் நீ கொண்டு வந்தால்
காண்பவை அனைத்தும் காரிருளில் மூழ்கும்
கருமேகமும் நீயும் சேர்ந்து குளிரும் பொழுது
கடுமழையும் வந்து கண் மறைக்கும்
கண் மறைந்து காரிருளில் காதலனைத் தேட
காலமும் கடந்திடும் காண்பதும் தடைபடும்
கருணை கொண்டு செவி மடுப்பாய்
சிறிது நின்று பின் வருவாய்....

காதலனை நான் காண வேண்டி.....

எழுதியவர் : கஎன்ன்ர் (12-Jan-16, 6:22 am)
பார்வை : 60

மேலே