போராடு அல்லது மாண்டுவிடு - சந்தோஷ்

துக்கமுள்ளவனுக்கு
தூக்கம் வருவதில்லை.
தூங்க மறுப்பவனுக்கு
துக்கம் போவதில்லை.

தூக்கம் ஒரு தியான நிலை
துக்கம் ஒரு மரண நிலை

போராடு.. அல்லது மாண்டுவிடு.

வாழ்க்கை அப்படியேதும்
பெரும் சூத்திரமல்ல.
பெரும் சூதுமல்ல.

கடலைகள் எப்போதும்
பேரலையாவதில்லை.
பேரலையே என்றாலும்
எதிர்வினை நீ ஆற்றாமல்
இருக்கப் போவதில்லை.

வாழ்க்கை...
மாபெரும் ஓர் ஆழி.
சந்தோஷ தென்றல் மட்டுமல்ல
துயர சுனாமியும் வீசவே செய்யும்.

இந்த நொடியும் நிரந்தரமில்லை
எந்த உறவும் நீளுவதில்லை
எதுவும் யாவும்....
மரணத்திற்கு உள்ளாகும்.

இன்றைய சோதனை..
நாளைய வேதனை..
எதையும்
எதிர்த்து நில்...
எதுவும் தகர்ந்து விடும்..!


துக்கமுள்ளவனுக்கு
தூக்கம் வருவதில்லை.
தூங்க மறுப்பவனுக்கு
துக்கம் போவதில்லை.

தூக்கம் தரும் தியான நிலை
துக்கம் தரும் மரண நிலை

போராடு.. அல்லது மாண்டுவிடு.
---

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (17-Jan-16, 8:23 am)
பார்வை : 255

மேலே