சொல்லப்படாத கவிதை

சொல்லப்படாத கவிதைக்கு
எழுப்படாத புகழுரை
வாசிக்கப்படாத வரையில் கவிஞனின் நெஞ்சில்
சிம்மாசனமிட்டமர்ந்தாய்
வெளிப்பட்ட அக்கணமே
விமர்சங்கனங்களின் தாக்கங்களுக்கு
ஆட்பட்டாய்
என் கவிதை பெண்ணே
உனக்கு எத்தனை எத்தனை அணி செய்து வைத்தேன்
உன்னை என் நெஞ்சில் பூட்டியல்லவா வைத்திருந்தேன்
உன்னை வாசித்தவுடனே
என்னை விட்டு எப்படி மாறி போனாய்
வாசகர்களின் வார்த்தைகளுக்குள் சிறை பட்டாய்
ஆசிரியர்களின் கைகளால் மோட்சம் பெற்றாய்
கவிதை நங்காய் !
என்னை மறந்தும் இருந்து விடாதே
நீ தவழும் வரையே நான் கவிஞன்
நீ என்னை புறக்கணித்து விட்டாலோ
நான் வெறும் மனிதன்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (17-Jan-16, 10:38 am)
பார்வை : 121

மேலே