தனிமை

காதலாகி கனிந்தது திருமணத்தில்
இருவீட்டாா் சம்மதத்தோடு.....!
மணிக்கணக்காய் பேசிய நாட்கள் கழிந்தன....!
உன்னோடு நானாய் இருந்த நிமிடங்கள் மறைந்தன....!
5 நிமிட இடைவௌியிலும் உன் தோழர்களாய்
கணினியும் தொலைக்காட்சியும் இடம்பெற,,
காணாது போய் விட்டன நம் தனிமைகள்...!
ஒற்றை மகளாய் தாய் பெற்று வளர்த்தியபோதும்
தொியவில்லையடா தனிமை,,
தாயானவள் என் தோழியாகிப்போனதால்....!
திருமணத்தால் நட்பு வட்டம் சிதைய,,,
தனிக்குடித்தனத்தில் நான் நீ வாழ...,,,
ஒட்டிக்கொள்ள வந்த தனிமையை
விரட்டுகின்றேன்,, தினசரி நாட்குறிப்பின் பக்கங்களாய்....!
உணர்ச்சி குமுறல்களாய் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள்
கண்ணீராய் வெளிவர,, எழுதுகின்றேன் நான்.....
காதல் மயக்கம் தௌிவது திருமணத்தில் தானோ...????

எழுதியவர் : ஷாமினி குமார் (17-Jan-16, 9:44 pm)
Tanglish : thanimai
பார்வை : 153

மேலே