தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து3---ப்ரியா

(தன் தோழியை காதலித்து ஏமாற்றிய வசந்தை பழிவாங்கும் நோக்கில் அவனது கம்பெனிக்கு வந்திருக்கும் ரியா அங்கிருக்கும் அனைத்தையும் நோட்டமிட்டுக்கொண்டிருக்கிறாள் எப்படி?அவனை வீழ்த்துவது என்ற யோசனையில்.....?)

வந்தனா சொன்னது உண்மையே என்று அதை பார்த்ததும் தெளிவு படுத்திக்கொண்டாள் ரியா..!

அங்கிருந்த தோட்டம் போன்ற ஒரு அமைப்பும் அதன் பக்கத்தில் ஒரு அழகிய சிறிய செயற்கை நீர்வீ ழ்ச்சியையும் இயற்கையை போன்று உருவாக்கியுள்ளான் அதுமட்டுமல்ல அதன் பக்கத்தில் ஒரு அறை வைத்துள்ளதாகாவும் தன்னுடைய மாயைகளை அங்குதான் நிகழ்த்துவான் என்றும் தன் தோழி சொன்னதை வைத்து எங்கிருக்கிறது அந்த பள்ளியறை என்று தேடினாள்........

அப்பொழுது ராம் வந்து இங்க என்ன பண்றீங்க மேடம் வாங்க கேண்டீனுக்கு போகலாம் என்று அழைத்து சென்றான்.

கேண்டீனில் 2 நிமிடங்கள் அவனுடன் பேசி அந்த கம்பேனியின் ஒவ்வொரு வேலைகளையும் பற்றி சுருக்கமாக தெரிந்து கொண்டாள்.

வசந்த் தனி ஆளாக இருந்து இந்த நிறுவனத்தை நம்பர்1 நிறுவனமாக மாற்றியுள்ளான் என்றும் வசந்த் புராணம் பாடினான் ராம்!

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக்கொண்டாள் ரியா...!

ஆக எல்லாருமே வசந்தை நல்லவனாக தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் அவன் இப்படியொரு பித்தலாட்டக்காரன் என்பது இங்கிருக்கும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும் என்றவள் எந்தெந்த வேளையில் தன் சதிதிட்டங்களை நடத்தலாம் என்று நினைத்தவள்? தோழிகளிடம் போய் இன்று ஆலோசிக்கலாம் என்று தன் இருக்கையை நோக்கி சென்றாள்....!

அப்பொழுது ஆபிஸ்க்கு போன்மூலம் அழைப்பு வந்தது எடுத்து பேசிய ராம்; அங்கிருந்து பேசியவர் கட்டளைகளை போட தாழ்ந்த குரலில் சரி சரி சார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.....

இறுதியில் எஸ் சார் வந்திருக்காங்க,இதோ இங்கதான் இருக்காங்க என்று ரியாவை பார்த்து சிரித்தான்.

ஓகே சார் இதோ கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு......மேம் சார் தான் பேசுறாங்க.... பேசுங்க என்று போனை கொடுத்தான்....!

ஹலோ! சார் என்று சொல்லி பேச ஆரம்பித்தாள் அவனது குரலை கேட்டதும் சற்று தடுமாறிதான் போனாள்......

கண்டிப்பான,கனிவான குரலுடன் பேசினான் ஒரு முதலாளிக்கு ஏற்ற திறமையான பேச்சும் கட்டுபாடும் அவனுக்கு இருப்பதை அவன் பேச்சிலேயே உணர்ந்து கொண்டாள்.....!

2நிமிட பேச்சு விசாரிப்புக்கு பிறகு....ஓகே நேரில் வந்து மற்றதெல்லாம் பேசலாம் முக்கியமான மீட்டிங் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் வசந்த்......!

அவனது பேச்சிலிருந்தே சிறிய விஷயம் முதல் பெரிய விஷயம் வரை அனைத்தையும் வெகு சிறப்பாய் இலகுவாய் முடித்து விடுவான் என்பதை புரிந்து கொண்டாள் ரியா.......கொஞ்சம் பார்த்துதான் நடந்துக்கணும் என்று தனக்குத்தானே கட்டளையிட்டுக்கொண்டாள்...;

அன்றைய ஆபிஸ் பொழுது சிக்கல் எதுவுமின்றி சிறப்பாய் முடிய வீட்டிற்கு செல்லத்தயாரானாள்.

இவள் வருகையை நோக்கிக்கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.... ஆனால் வந்தனா மட்டும் நகத்தை கடித்துக்கொண்டு அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தாள்..ரிலேக்ஸ்மா எல்லாம் நல்ல படியா நடக்கும் டென்ஷன் ஆகாதே என்று அவள் தோளை தட்டிக்கொண்டாள் கீது இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலருகில் வந்து சேர்ந்தாள் ரியா?????

என்ன ரியா என்ன ஆச்சுமா???

ஏதாவது நடந்திச்சா?

என்று ஆவேசமாக கேள்விகளை அடுக்கினாள் வந்தனா.......

கிளி பறந்து போயிடிச்சே என்று நக்கலாய் பதிலளித்தாள் ரியா...

என்னடி சொல்றா?ஒழுங்கா பேசு ஒன்னும் புரியல்ல என்று கண்மூடாமல்..... இவள் பதிலை எதிர் பார்த்து நின்றாள்????????

ஒன்றும் ஆகலடி அவன் இன்று வெளியூருக்கு சென்றுவிட்டான் நாளைக்கு தான் வருவான் என்று சோகமாய் பதிலளித்தாள்.....

சே!முதல் நாளே ஏமாற்றமா?

அது கிளி இல்லை ஓநாய் என்று கீது சொல்ல அங்கு டென்சனோடு கொஞ்சம் கலாய்ப்பும் எட்டிப்பார்த்தது.......

சரி அடுத்த நாள் ஆகவேண்டியதைப்பார்ப்போம் என்று சீரியசாக பேச ஆரம்பித்தனர்.....!

அவனிடம் நடந்து கொள்வது பற்றி சில அறிவுரைகளையும் அங்குள்ள தயாரிப்பு ரகசியங்களை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றியும் புரியும் படி சொல்லிகொடுத்துக்கொண்டிருந்தாள் வந்தனா.....

தெளிவாய் மனதில் பதித்துக்கொண்டாள்.

உன்னோட வீக்னெஸ் என்னன்னா எளிதில் அனைவரையும் நம்புவதும்,உதவி செய்றதும் தான் அதனால அந்த நல்ல எண்ணங்களையெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு மூட்டைக்கட்டி வைத்து விட்டு இவன ஏமாற்றி நடுத்தெருவுல நிக்க வைக்கிறவரைக்கும் எனக்காக இரு என்று எச்சரித்தாள் வந்தனா.......

அதுமட்டுமில்ல அவன் என்ன பேசினாலும் அடிக்கடி எனக்கு தகவல் தந்து கொண்டே இருக்க வேண்டும் என்னைப்பற்றியோ நம் நட்பை பற்றியோ அவனிடம் வாய் திறக்கக்கூடாது இன்னும் பல விஷயங்களை பேசி விட்டு கையில் சத்தியமும் வாங்கிக்கொண்டாள் வந்தனா.......

காதல் என்ற பெயரில் நடந்த ஏமாற்றத்தையும், இவளுக்கு பணம்,ஆடம்பரம், அந்தஸ்து இல்லை என்று அவன் கேவலப்படுத்தி நிராகரித்ததையும் படம் போல் கண்முன் காட்டிவிட்டு படுக்க சென்று விட்டாள்.....

தோழிகள் தூங்கிவிட்டனர் ஆனால் என்னவோ ரியாவுக்கு தூக்கம் வரவில்லை தாம் செய்வது தப்புதான் என்றாலும் அவனை பழிவாங்க இவளுக்கு வேறு வழி தெரியவில்லை அவன் மேல் மிகுந்த வெறுப்புடன் இருந்தவளுக்கு தூக்கமும் வெறுத்து போனது.....

அடுத்த நாள் மறுபடியும் அவளை ஒரு தேவதை போல் கிளப்பிவிட்டாள், சொன்னதெல்லாம் நினைவில் இருக்கட்டும் என்று எச்சரிக்கையூட்டி அனுப்பி வைத்தாள்....!

பல எண்ண ஓட்டங்களுடன் அங்கிருந்து கிளம்பி வசந்த் நிறுவனத்தை அடைந்தாள்.

ராம் இன்னும் வந்திருக்கவில்லை..முதல் அறையில் இரண்டு பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் இவளை பார்த்ததும் வணக்கம் வைத்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.....

உள் அறைக்கு சென்றவள் அங்கு வசந்த் இருப்பதை பார்த்து விட்டு வணக்கம் சார்....... நான்தான் ரியா என்று சொல்லி கைகூப்பினாள்...!

ம்........தெரியும் என்றவன் உச்சந்தலை முதல் பாதம் வரை பார்த்துவிட்டு நைஸ் என்றான்.....

சார் என்று கூப்பிட்டாள்.....??.

அவன் அவளருகில் வந்து கைகுலுக்கினான்......அவன் கழுகுப்பார்வை தன் மேல்படுவதை உணர்ந்தாள் ரியா இருந்தும் அதை கவனிக்காதது போல் பேச ஆயத்தமானாள்......






தொடரும்......!

எழுதியவர் : ப்ரியா (18-Jan-16, 10:40 am)
பார்வை : 407

மேலே