அம்மா

கட்டிக்கொண்டு கிடந்து
கதைகள் பேசுவாள்..இதழ்
முத்தங்கள் பேசும்போது
விழிமூடிக்கிடப்பாள்..
பிரியும்போது அழுது நடிப்பாள்..
அவள் போலிக்காதலியென்றாள்..
"அண்ணா"என்றும் அபத்தமாய் அழைப்பாள்
கெட்டவனுக்கு வாய்ப்புகள் அதிகம்..
மௌனிகளுக்கு வாய்ப்புகள் நிரந்தரம்
நல்லவனுக்கு வாய்ப்புகள் குறைவு
மிகவும் நல்லவனென்றால்.. வாய்ப்புகளே இல்லை..
என்ன வாய்ப்பு என்று கேட்கிறீர்களா..
உயிர் வாழத்ததான்..
என் மௌனம் குமைந்து கொண்டிருக்கிறது..
உள்நின்று கனன்றுகொண்டிருக்கிறது..
ஆத்திரமாய்க் குமுறிக்கொண்டிருக்கிறது
இது எரிமலையாய் வெடித்தால்... நான்..
வாழ்வின் எல்லைவரை ஓடஓட விரட்டப்படுவேன்..
ஏனென்றால்..இது வீதிப்பையன்களின் அட்டகாசஉலகம்.
அம்மா..
ஒரு விடயத்தை
உன்னிடம் மறைத்துவிட்டேன்..
சொல்லநினைத்தேன்..
உன் மனம் உடைந்து விடுமோ
என்ற அச்சத்தில் தவிக்கிறேன்..
அம்மா..
உனக்குப் பிடிக்காத உன் தம்பியின்..
மகளை எனக்குப் பிடித்தது..
ஏனம்மா..