கை வைத்தியன்

காதலில் கரை புரள கவித்திறனும்
கவித்திறன் கரை புரள காதலும்
ஒன்றுக்கொன்று இணை பிரியா
கரை காணத் துடிக்கும் துருவங்களாகும்
அவையே காதலர்களும் கவிஞர்களுமாம் ,

காதலில் தோல்வி இன்றி
கவிதையில் வெற்றி இல்லை
காதலில் வெற்றி இன்றி
கவிதையில் இன்பம் இல்லை
காதலில் ஏங்கும் இதயம் ஓன்று
ஏமாற்றும் இதயமும் ஓன்று
எதையும் தாங்கிட தாங்கிப் பிடிப்பது
கவிதை எனும் மகத்தான சக்தி ஒன்றே

கவிதை என்பது காதலில் துடிக்கும்
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கை வைத்தியன் போல
அவன் கை பிடிக்கும் பேனாவினால்
காதலின் ஆயுளையே அளந்திடுவான்
அக்கவிஞன் தான் வாழ, தன் கவி வாழ ,
காதலரைக் கைக்குள்ளே கொண்டிடுவான்
கவிஞனே நீ மிகப் பெரிய வித்தகனே

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Jan-16, 2:42 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 70

மேலே