குறுக்க மறிச்சு நறுக்குனு குடுத்தா

முத்தான வார்த்தையப் போட்டு
எஞ் சொத்தான அவளுக்கு
கொத்துக் கொத்தா பாட்டெழுதி
கோர்த்து கோர்த்து பாடிப்போனேன்
குறுக்க மறிச்சி நறுக்குனு கொடுத்து
பாடு மச்சா(ன்) சொச்ச(ம்)பாடுனு
சொல்லிப்புட்டு கண்ணால கிள்ளிப்புட்டு
நெனப்போட நடந்துக்கிட்டு
நெஞ்ச கரைச்சு எடுத்துக்கிட்டு
எ(ன்) நாசக்காரி நகந்து போறா
எ(ன்) பாட்டோட பறந்து போறா...

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (23-Jan-16, 10:19 pm)
பார்வை : 136

மேலே