என் விழிகளுக்கு

என் விழிகளுக்கு !

அழகான ரோஜா
மலர்கள் மட்டுமே
தெரிந்தன!
முட்கள் ஏனோ
புலப்படவில்லை !
என் விழிகளுக்கு

மரக்கிளை உச்சியில்
தேன்கூடு மட்டுமே
தெரிந்தன!
கொட்டும் தேனீக்கள்
ஏனோ தெரியவில்லை
என் விழிகளுக்கு !

சித்திரை திங்களில்
சுட்டெரிக்கும் மணற்பரப்பில்…
கடலலைகள் மட்டுமே
தெரிந்தன
மணற்பரப்பு ஏனோ
எனை சுடவில்லை !

கொட்டித் தீர்த்த
கணமழையில்
எல்லா இடத்திலும்
வெள்ளமாய் சூழ்ந்திருக்க
வெள்ளத்தின் ஆழத்தை
கால்கள் ஏனோ காணவில்லை!


இத்தனையும்… இடையூறாய்
மற்றவர்களுக்கு தெரிந்தது
எனக்கு மட்டும்
இடையூறாய் இல்லாதது
இனிய காதலி……….!
என்னுடன் இருந்ததாலே !


----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (27-Jan-16, 9:11 pm)
Tanglish : en vizhikaluku
பார்வை : 122

மேலே