வானவில் வட்டமாகுதே

(வானவில் வட்டமாகுதே... மெட்டு)

மேகத்தின் தாகம் கூடுதே
காகமும் காதல் பாடுதே
சொல்லுக்குள் வெல்லம் நிறைந்து
சொல் ஒன்றும் சொர்க்கமாகுதே
ஒரு வார்த்தை சொல்லி செல்ல
உயிரை நீ அள்ளி கொள்ள
பூமியும் பூவாய் மாறுதே....
என்னக் குத்தி குத்தி தூக்கிப் போடவே
ஆசை கூடிபோயி நானும் ஆடவே
என்னக் கத்தி கத்தி நீயும் ஏசவே
உன்னப் பத்திமட்டும் நானும் பேசவே...

முத்து முத்து பாண்டி முத்து
கோத்து வச்சே ஒன்னக் காணாம்
ஆசமுள்ள தூக்கிப் போட
மாட்டிக்கிட்டே மீனா நானும்
ஓ... விழியின் ஓசை
என்... உயிரசைக்க

என் வாழ்வு முழுதாய் ஆக
உன் உள்ளே முடிந்தே போக
சொர்க்கமும் நீயே தானடி....

நில்லு நில்லு நீயும் நில்லடி
சொல்லு சொல்லு ஏதோ சொல்லடி
நில்லு நில்லு என்னில் நில்லடி
சொல்லு சொல்லு சொத்தே சொல்லடி.

காதல் கொடி என்னுள் வந்து
ஏகபோகம் படர்ந்தாச்சு
காதல் என்ன ஆட்டிவச்சு
உள்ளுக்குள்ள நிறஞ்சாச்சு
உன் உயிரின் எங்கும்...
என் உயிர் தங்கும்.

பொறிபார்த்தும் தெரிந்தே போனேன்
உனக்குள்ளே உறைந்தே போனேன்
உன்னாலே என்னைத் தேடினேன்.

நில்லு நில்லு நீயும் நில்லடி
சொல்லு சொல்லு ஏதோ சொல்லடி
நில்லு நில்லு என்னில் நில்லடி
சொல்லு சொல்லு சொத்தே சொல்லடி.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (28-Jan-16, 7:16 pm)
பார்வை : 77

மேலே