சிற்றின்பம்

மதுவைக் குடித்து மதியை இழந்தேன்
புகையைக் குடித்து ஈரலைக் கெடுத்தேன்
பொடியை உண்டு புற்றை வளர்த்தேன்
மாதுவை நாடி நோயினை பெற்றேன்
இந்த சிற்றின்பத்தினால் தரத்தை இழந்தேன்
குடும்பத்தை இழந்தேன் மரியாதை இழந்தேன்
சுற்றம் இழந்தேன் நட்பையும் இழந்தேன்
இச்சிற்றின்ப வேட்கையினால் நான் எனது
பேரின்பம் அனைத்தையும் இழந்தேன் .

எழுதியவர் : விக்னேஷ் நதியா (29-Jan-16, 11:34 pm)
சேர்த்தது : விக்னேஷ் பழனி
பார்வை : 296

மேலே