காலங்கள் தா
கல்விகற்க செல்கின்றக் காலத்தில் கஷ்டத்தால்
கல்லுடைத்து வாழ்வோட்டும் எங்களுக்குச் – சொல்லிக்
கொளவென்று சொந்தம் எதுவுமில்லை. தெய்வம்
மெனக்கெட்டு செய்த பிழை.
தெருவில் கிடப்பதற்கு தெய்வம் படைக்கும்
உருவம் எமக்கான திங்கே – கருவில்
சுமந்தவள் கைவிட்டுப் போக வறுமை
சுமந்திங்கு வாடுகிறோ மே.
இழப்பதற்கு கென்றெதுவு மின்றி உரத்து
அழக்கூட தெம்பின்றி வாழப் – பழகிவிட்டோம்
காலமே கண்ணீரில் கோலங்கள் தீட்டாத
காலங்கள் எங்களுக்குத் தா.
*மெய்யன் நடராஜ்