உன்னாலே உன்னாலே
சிரித்து சென்றாய் உருகிப் போனேன்
முறைத்துச் சென்றாய் கருகிப் போனேன்
கோபித்துக் கொண்டாய் சருகாய்ப் போனேன்
உரையாடிச் சென்றாய் தூள்தூளாய்ப் போனேன்
பார்த்துச் சென்றாய் பறந்து போனேன்
பாராமல் சென்றாய் இறந்து போனேன்
விலகிச் சென்றாய் வீழ்ந்தே போனேன்
நெருங்கி வந்தாய் உறைந்து போனேன்
அணைத்துக் கொண்டாய் எனைமறந்தே போனேன்