உனக்காக நானிருப்பேன்
தொடுதிரையாய் நானிருப்பேன் உன் விரல்கள்
என் மீது படும் என்றால்
செவிப்பொறியாய் நானிருப்பேன் உன் செவிகள்
இனிய இசையை ரசிக்கும் என்றால்
இணையவலையாய் நானிருப்பேன் உன் தேடல்
நானாய் இருக்கும் என்றால்
மின்காந்த அலைகளாய் நானிருப்பேன் உன் குரல்
என் பெயர் கூறும் என்றால்