கவலையோ கவலை

கவலையோ கவலை !

பொழுது புலர்ந்த்து
காலை எழுந்தவுடன்
கண்ணாடி பார்த்தேன்!

தூக்கத்தின் சுவடுகள்
தொலையாது இருந்தன
தெளிந்த பின்னே
கவலைகளின் சாயல்கள்
முகத்தில் படிந்தன!

மீண்டும் கண்ணாடி பார்த்தேன்
கவலைகளின் சாயல்களை
கண்ணாடி காட்டிற்று !
கடிந்து கொண்டேன் !
கண்ணாடியை….
கண்ணாடியும் என்னை
கடிந்து கொண்டது!

பேருந்து கிட்டுமோ என கவலை !
பேருந்து கிட்டினால் இருக்கை கிட்டுமோ
என கவலை !
இருக்கைக் கிட்டினால்
சன்னலோர இருக்கைக்கு கவலை !

சன்னலோர இருக்கையில்
காற்று நன்றாய் வருமா என கவலை !
காற்று நன்றாய் வந்தால்
காலையிலேயே தூங்கி விடுவோமோ
என கவலை

நிறுத்துமிடம் வந்தால்
பேருந்து நிற்குமோ என கவலை!
அலுவலகத்தில் வேலை கவலை
வேலையில் பதவி உயர்வு கவலை!
பதவி உயர்வில் மாறுதல் கவலை !
கவலையோ…கவலை
இந்த கவலைத் தோய்ந்த முகத்தை
கண்ணாடியில் காட்டிடவே கவலை!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (1-Feb-16, 8:59 pm)
Tanglish : kavalaiyo kavalai
பார்வை : 108

மேலே