என் உயிர்ப்பின் காரணி
ஒரு மல்லிகைச் சரம் பெறும்
உச்சபட்ச கௌரவம்
நீயதை சூடிக் கொள்வது
ஒரு வார்த்தையை
அமிழ்தமாக்கும் ரசவாதம்
நீயதை உச்சரிப்பது
ஒரு கனவு
சாஸ்வதமாகும் தருணம்
நீயதில் வருவது
வெறும் காற்று
தென்றலாகத் தீர்மானிப்பது
அதுவுன்னை தழுவித் திரும்பும்போது
ஒரு நீரோடை
தேவத்தன்மை பெறுவது
நீ நீராடும்போது
என் ஜீவன்
இன்னும் இன்னுமென இறைஞ்சுவது
உன் பார்வை பட்டுத் திரும்பும் போது
இன்னுஞ்சொல்வதென்றால்....
என் உயிர்ப்பிற்கான
ஒற்றைக் காரணி
நானுன்னைக் காதலிப்பது .