வனத்தின் வேண்டுகோள்
மனிதன்
முதல் முதலாய்
வாழ்க்கையைத் தொடங்கியதும்
இங்குதான்...!
வாழ்வைத் தொலைத்ததும்
இங்குதான்...!
அறிவியல் அதிசயங்களை
அறிந்ததும் இங்குதான்...
அறிவியலால் அழிந்ததும்
இங்குதான்...!
நாகரீகம் தொடங்கியதும்
இங்குதான்...!
நகரங்களால்
நரகமாகி போனதும்
இங்குதான்...!
விலங்கினங்களுக்கிடையை
போராடியவன்..
மனிதர்களுக்கிடையில்
விலங்காத
விலங்கினமாகிப் போனதும்
இங்குதான்...!
உயிர்க்கோள்மே
உயிர் பெறுவது
இங்குதான்...!
உங்கள் இருதயங்கள்
சுருங்கி விரிய,
நாங்கள் விரிந்துகிடக்க
தயவுசெய்து விடுங்கள்...!
.........................................சுபி முருகன்........................................................